என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை
நீங்கள் தேடியது "தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை"
குடும்ப தகராறில் தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தமேலுபள்ளி அருகேயுள்ள சிவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார்.இவரது மனைவி ஜோதிகா (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
தற்போது இவர்கள் கிருஷ்ணகிரி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்துவருகின்றனர். கணவன் ,மனைவி இடையே கடந்த 25-ந்தேதி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜோதிகா தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோதிகா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . திருமணமாகி 2 வருடத்திற்குள் பெண் தற்கொலை செய்துகொண்டதால் டி.எஸ்.பி.விஜயராகவனும் விசாரனை மேற்கொ ண்டுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டில் வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளைத்தை சேர்ந்தவர் சத்திய பிரியா (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சத்திய பிரியாவிடம் அவரது தாய் வீட்டு வேலையில் தனக்கு உதவி செய்யுமாறு கூறினார். ஆனால் அவர் வேலை செய்ய மறுத்துவிட்டார். இதனையடுத்து சத்திய பிரியாவை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சத்திய பிரியா வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சத்திய பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X